சாலையில் மயங்கிய பெண் - களத்தில் இறங்கி காப்பாற்றிய அமைச்சர்

x

சைதாப்பேட்டையில் சாலையில் மயங்கி விழுந்த பெண்ணை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது காரில் ஏற்றி சென்று, மருத்துவமனையில் அனுமதித்தார். சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில், நடந்து சென்று கொண்டிருந்த ராணி என்ற பெண், திடீரென மயங்கி விழுந்தார். இதனைக்கண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், அப்பெண்ணை காரில் ஏற்றி சென்று, கிண்டி கலைஞர் நூற்றாண்டு நினைவு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்