கார்த்திகை தீபம் பார்க்க வந்த பெண் பரிதாப பலி.. "ஏற்கெனவே இறந்தவருக்கு ஏன் இப்படி பண்ணீங்க"

x

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில், மருத்துவர் இல்லாததால் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபம் பார்க்க வந்த, 65 வயதான கலாவதி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அவர் திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அங்கு மருத்துவர் இல்லை என செவிலியர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து சுமார் அரை மணி நேரம் கழித்து மருத்துவர் வந்த நிலையில், மூதாட்டி மருத்துவமனை வரும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறினார்.

அதை ஏற்க மறுத்த உறவினர்கள், வரும் வழியிலேயே இறந்தவருக்கு ஏன் கையில் ட்ரிப்ஸ் போட்டீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மருத்துவமனையில் தொடர்ந்து இது போன்ற நிலை நீடிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்..


Next Story

மேலும் செய்திகள்