தள்ளாடும் பாட்டிக்கு பாலியல் தொல்லை.. அனுமதிக்காத பாட்டி.. தெறித்த தலை.. - மதுரையில் கொடூர சம்பவம்

x

திருப்பரங்குன்றம் அருகே 66 வயது மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்து, தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள திருநகர் பகுதியில், 66 வயதான ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் சாலையோரம் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், பேருந்து நிலையம் அருகே ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தனக்கன்குளத்தை சேர்ந்த அலெக்ஸ் என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், நகைக்காக மூதாட்டியை நோட்டமிட்டு, பாலியல் வன்புணர்வு செய்ததோடு, தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். அலெக்ஸ் மீது ஏற்கனவே இருசக்கர வாகனங்களை திருடியதாக வழக்குகள் உள்ளதாக தெரிய வந்துள்ள நிலையில், கொடூர கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்றே மணிநேரத்தில் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்