போன் Call -ஐ கட் செய்த மனைவி... குழந்தை கழுத்தை நெரித்து, சுவற்றில் முட்டி.. துடி துடித்த குழந்தைகள் - வீடியோ எடுத்த தந்தை

x

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள கோரஞ்சால் பகுதியை சேர்ந்தவர் சூரியா. இவரின் மனைவி மலேசியாவில் தங்கி பணிபுரிந்து வரும் நிலையில், கடைசி சில நாட்களாக மனைவியை சூரியா தொடர்பு கொண்டபோது, அவரின் செல்போன் அழைப்பை மனைவி நிராகரித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சூரியா தனது இரு குழந்தைகளையும் கொடூரமாக தாக்கி, அதை வீடியோவாக பதிவு செய்து மனைவிக்கு அனுப்பியிருக்கிறார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இரு குழந்தைகளையும் சூரியாவிடமிருந்து மீட்ட போலீசார், சூர்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்