ஒரு ஆம்லெட்டுக்காக மைத்துனரையே.. அடித்து கொலை செய்த மாமா. சென்னையில் நிகழ்ந்த பயங்கரம்..!

x

கல்பாக்கம் அருகே, மதுபோதையில் ஆம்லெட்க்காக மைத்துனரை கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.

கல்பாக்கம் அடுத்த உய்யாலிகுப்பம் இருளர் பகுதியை சேர்ந்த செல்லப்பன் மற்றும் அவரது உறவினர் முருகன் ஆகிய இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது போதை தலைக்கேறிய நிலையில், இருவருக்கும் இடையே ஆம்லெட் சாப்பிடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முருகன், செல்லப்பனை கட்டையால் தலையில் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கொலை செய்த முருகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்