சென்னையில் இருந்து கிளம்பிய ரயில்.. அடுத்தடுத்து 80 பேர்... அலறவிட்ட பாரத் கவுரவ் ரயில்

x

சென்னையில் இருந்து புறப்பட்ட பாரத் கவுரவ் சிறப்பு ரயில் நேற்று இரவு தாமதமாக புனே ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.. ரயிலில் பயணித்த 80 பயணிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு பிரச்சினை ஏற்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து இரவு 10.45 மணியளவில் புனே ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இரவு 11.25 மணியளவில், ரயில் புனே நிலையத்திற்கு வந்தடைந்ததும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டது. ரயில்வேயால் உணவு வழங்கப்படாத நிலையில், உணவு வழங்கிய தனியார் அமைப்பு மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரயில்வேத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்