தமிழகத்தில் நுழைந்த தெலங்கானா கும்பல்.. தில்லாக இறங்கி தெறிக்கவிட்ட பெண் DSP

x

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே குழந்தையை தத்தெடுத்து கொடுப்பதாக கூறி ஏமாற்றியவரின் 8 வயது சிறுவனை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.ஓமலூரை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வெங்கடாசலம், குழந்தையை தத்துக் கொடுப்பதாகக் கூறி தெலங்கானாவைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரிடம் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் வாங்கியுள்ளார். ஆனால், வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமலும், குழந்தையை தத்துக் கொடுக்காமலும் ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து, தெலங்கானாவில் இருந்து தனது உறவினர் ஒருவருடன் வந்த வெங்கடேஷ், ஓமலூரைச் சேர்ந்த 2 பேரை அழைத்துச் சென்று, வெங்கடாசலத்திடம் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர். அப்போது, அங்கிருந்த வெங்கடாசலத்தின் 8 வயது மகனை அவர்கள் அதிரடியாக காரில் கடத்திச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடாசலம் தீவட்டிபட்டி, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா தலைமையிலான போலீசார் அதிரடியாக விரட்டிச் சென்று பெங்களூரில் குழந்தையை கடத்திச் சென்றவர்களின் காரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்ட போலீசார், குழந்தை கடத்தலில் ஈடுபட்ட வெங்கடேஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்