தொடர்ந்து அத்துமீறும் இலங்கை கடற்படை.. மாநில அரசுக்கு கோரிக்கை வைத்த மீனவர்கள்

x

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரு விசைப்படகையும், அதிலிருந்து ஆறு மீனவர்களையும் கைது செய்து காரைநகர் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். தொடர்ச்சியாக இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்யப்பட்டு வருவதனால் மிகுந்த அச்சமடைந்துள்ள மீனவர்கள், மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்