தந்தையை ரோட்டோரம் வீசி சென்ற மகன்... இடுப்பு முறிந்து மழை, குளிரில் கிடந்த கொடுமை

x

ஸ்ரீபெரும்புதூரில் நடக்க முடியாத தந்தையை பெற்ற மகனே சாலை ஓரத்தில் விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் செல்வகுமார். 65 வயதான இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வக்குமாரை உடன் இருந்து பார்க்க மனமில்லாத மகன், அவரை மருத்துவமனையில் இருந்து அழைத்து வந்துள்ளார். நடக்க கூட முடியாத அவரை தொந்தரவாக கருதி ஸ்ரீபெரும்புதூர் அருகே நெமிலி சாலையின் ஓரமாக விட்டு விட்டு சென்றுள்ளார்.

சாப்பிடாமல், நடக்க முடியாமல் மழையில் நனைந்தபடி மோசமாக காணப்பட்ட அவரை பார்த்து அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நனைந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவரது ஆடைகளை மாற்றி சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நடக்க முடியாத தந்தையை பெற்ற பிள்ளையே சாலையோரம் தவிக்கவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்