கண்முன்னே குலைநடுங்கிய பெற்றோர்.. சிரித்தபடி மகள் அனுப்பிய போட்டோ.. அப்படியே மாறிய முகம்

x

இளம்பிள்ளையைச் சேர்ந்த ஐயப்பனின் மூத்த மகள் பிரகதீஸ்வரிக்கு நிச்சயதார்த்தம் செய்ய ஜலகண்டாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தனர். சின்ன பணிக்கனுார் பகுதியில் சென்ற போது காரின் பின்னால் வந்த 6 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து பிரகதீஸ்வரியை மற்றொரு காரில் கடத்தி சென்றனர். இது தொடர்பாக பெண்ணின் தந்தை ஐயப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை கடத்திச் சென்ற மர்ம நபர்கர் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இளம்பிள்ளையைச் சேர்ந்த ஹரி அரவிந்த் என்ற இளைஞரை பிரகதீஸ்வரி 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததும், வீட்டில் வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஹரி அரவிந்த் நண்பர்களுடன் வந்து பிரகதீஸ்வரியை கடத்திச் சென்றதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது...

மேலும் பிரகதீஸ்வரியும், ஹரி அரவிந்தும் திருமணம் செய்து கொண்டு அதன் புகைப்படத்தையும் பெற்றோர்களுக்கு அனுப்பி உள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

கண்முன்னே குலைநடுங்கிய பெற்றோர்.. சிரித்தபடி மகள் அனுப்பிய போட்டோ.. அப்படியே மாறிய முகம்.. தலைகீழான எமோஷன்


Next Story

மேலும் செய்திகள்