"நீங்க எல்லாம் இன்ஜினியர் தானா..?".தொட்டாலே பெயர்ந்து வரும் சாலை..ஆத்திரம் அடைந்த பொதுமக்கள்

x

ராமநாதபுரத்தில் தரமற்ற வகையில் சாலை அமைப்பதாகக்கூறி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாயல்குடியில் நகர்புறச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், 48 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு, புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. சாலை தரமற்ற வகையில் அமைக்கப்படுவதாகக் கூறியும், பணிகளை நிறுத்துமாறும் அதிகாரிகளுடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது, ஒருவர் தனது கைகளால் சாலையை தோண்டி எடுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்