குளிர்பானத்தில் இருந்த பவுடர் - குடித்தவுடன் மயங்கிய வழக்கறிஞர் - செங்கல்பட்டில் அதிர்ச்சி

x

செங்கல்பட்டு தனியார் ஓட்டலில் குளிர்பானம் குடித்த வழக்கறிஞருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரி அருகே ஜாய்லேண்ட் என்ற ஓட்டலில் நண்பர்களோடு உணவு அருந்திய கீர்த்திவாசன் என்ற வழக்கறிஞர் அதே ஓட்டலில் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளார். அந்த குளிர்பான பாட்டில் அடிப்பகுதியில் ஏதோ கழிவுகள் தூள், தூளாக தென்பட்டுள்ளது. இதை குடித்த அவருக்கு தலைசுற்றி வாந்தி வந்ததால் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி அனுராதாவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்