கோர விபத்தில் பல உயிர்களை மீட்ட போலீஸ்.. காவல் நிலையத்தில் நுழைந்ததும் மாரடைப்பு..

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பேருந்துகள் மோதிய விபத்தில் சிக்கியவர்களை மீட்ட தலைமை காவலர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் பணியில் இருந்த தலைமை காவலரான 42 வயது முரளி, மீட்புப் பணியில் ஈடுபட்டு விட்டு காவல் நிலையம் சென்றுள்ளார்... அங்கு சென்றவுடன் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துவேல் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் ஆகியோர் முரளியை மருத்துவமனையில் சந்திக்க வருகை தந்து சிகிச்சையை துரிதப்படுத்த அறிவுறுத்தினர். ஆனால் முரளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்