மெக்கானிக்கை வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல்..! ரத்தம் சொட்ட சொட்ட ஓடிய நபர்..!

x

செம்பட்டி அருகே, போடிகாமன்வாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர், செம்பட்டியில் டூவீலர் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த மற்றொரு பிரிவினருக்கும், கோவில் விஷயத்தில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், செந்தில்குமாரின் வீட்டிற்குள், நள்ளிரவில் 10 பேர் கொண்ட கும்பல் நுழைந்தனர். அவர்கள், செந்தில்குமாரை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதனையடுத்து, செந்தில்குமார் வீட்டை விட்டு வெளியே ஓடிய நிலையில், அப்போதும் துரத்தி சென்று கத்தியால் தாக்கினர். இதில், செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி பலியான நிலையில், குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீசி உள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்