காரை நீண்ட நேரம் நிறுத்தாமல் ஓட்டி வந்த நபர்..பற்றி எரிந்த தீ - நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்

x

தேனி போடிநாயக்கனூரில் இருந்து மூணாரு செல்லக்கூடிய போடி மெட்டு மலைச்சாலையில், ராம லட்சுமி என்பவர் தனது மகன்களுடன் கேரளம் இடுக்கி சூரிய நெல்லியிலிருந்து சொந்த ஊரான சிவகாசிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவரது மகன் பாபு காரை ஓட்டிய நிலையில், புலியூத்து அருகில் உள்ள 10வது கொண்டை ஊசி வளைவில் காரின் ரேடியேட்டரில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. உடனடியாக அவர்கள் காரை விட்டுக் கீழே இறங்கிய நிலையில், ரேடியேட்டரில் பிடித்த நெருப்பு கார் முழுவதும் பரவி பற்றி எரிந்தது... நீண்ட தூரம் காரை நிறுத்தாமல் ஓட்டி வந்ததால் ரேடியேட்டர் வெப்பம் அடைந்து தீப்பற்றி இருக்கலாம் என காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்