10லட்சம் பல்கா வாங்கி விபூதி அடித்த நபர்.. வாய், வயிற்றில் அடித்துக்கொண்ட மக்கள் -ஈரோட்டில் பயங்கரம்

x

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த நஞ்சை ஊத்துக்குளி கருந்தேவன்பாலையம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். மாற்றுத் திறனாளியான இவர், தனக்கு தெரிந்த நண்பர்களிடம் வருவாய் துறையில் கார் ஓட்டுனர் பணிக்கு ஆட்கள் எடுப்பதாகவும், வேலை வேண்டுமானால் பணம் செலவாகும் என்றும் கூறி உள்ளார். பாலமுருகனின் பேச்சை நம்பி, ஈரோடு செல்வராஜ், வீரபத்திரன், அசோக்குமார், பிரசாந்த் ஞானசெல்வன் ஆகிய 5 பேர், தலா இரண்டு லட்சம் என 10 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளனர். சிறிது நாட்கள் கழித்து, ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் 5 பேருக்கு, பாலமுருகன் பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளார். இதனை நம்பி 5 பேரும் நியமன ஆணைகளை எடுத்துக் கொண்டு பணியில் சேர சென்றபோது, அவை போலியானவை என தெரியவந்தது.

தாங்கள் ஏமாற்றபட்டதை அறிந்த 5 பேரும், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலமுருகனை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்