ஆபாசமாக பேசி அதிகாரியை சரமாரியாக தாக்கிய நபர்... வெளியான அதிர்ச்சி வீடியோ

x

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் - கைனூர் இடையே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை மாற்றுப்பாதையில் தொடரவும், தற்போது உள்ள இடத்தில் நேராக சுரங்கபாதை அமைக்கக்கோரியும் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், சம்பவத்தன்று தெற்கு ரயில்வேயின் அரக்கோணம் பிரிவு இளநிலை பொறியாளரான சதீஷ்குமார், சுரங்கப்பாதை பணியை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சதீஷ்குமாரிடம் கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிலர் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், சட்டென ஆபாசமாக பேசி அவரை தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது


Next Story

மேலும் செய்திகள்