குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்த அதிகாரி..! மண்ணை கையில் எடுத்த நரிக்குறவர்கள்... பரபரப்பான திருச்சி

x

திருச்சியில், பிச்சை எடுக்க வைப்பதாகக்கூறி குழந்தைகளை அழைத்துச் சென்ற அதிகாரிகளை கண்டித்து நரிக்குறவ மக்கள் போராட்டம் நடத்தினர். சமயபுரம், நம்பர் ஒன் டோல்கேட் அருகே நரிக்குறவர் காலனியை சேர்ந்த சிலர், தங்களது பிள்ளைகளை, திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுக்க வைப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, 2 வயது குழந்தை மற்றும் 7 சிறுமிகளை சைல்டு லைன் அலுவலர்கள் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. குழந்தைகளை தவறாக நினைத்து அழைத்துச் சென்றதாகக்கூறி, நரிக்குறவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்