திடீரென வந்த ஆபாச புகைப்படம்.."App வழியில் எமன் என்ட்ரி.." விளையாட்டால் முடிந்த விதி..

x

பென்னாகரம் பாப்பாரப்பட்டி அருகே வசித்து வந்த சூர்யபிரகாஷ் என்ற இளைஞர், பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் வாங்கி, ஆன் லைன் கேம்லிங், கிரிக்கெட் சூதாட்டங்களை சூர்யபிரகாஷ் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. கடனை திரும்ப செலுத்த முடியாத சூழலில், ஆன்லைன் கடன் செயலி கும்பல், அவரது புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சூர்யா பிரகாஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில, அவரை மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு


Next Story

மேலும் செய்திகள்