கடைக்குட்டியுடன் கை கோர்த்த தாய் - மூத்த மகனை அடித்தே கொன்ற கொடூரம்

x

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே காங்கிரஸ் நிர்வாகியை, அவரது தாயும், சகோதரருமே கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்ரீவைகுண்டம், கொங்கராயகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் மாரிச்செல்வம். காங்கிரஸ் கட்சி நிர்வாகியான இவருக்கும், இவரது குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதில், கடந்த 3 ஆம் தேதி ஏற்பட்ட தகராறில், மாரிச்செல்வத்தை அவரது தாய் லட்சுமியும், சகோதரர் மணிகண்டனும் கட்டையால் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், படுகாயமடைந்த மாரிச்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாரிசெல்வத்தின் தாயையும், சகோதரியையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மாரிச்செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட இருவர் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்