பச்சிளம் குழந்தையை பிளேடால் வெட்டி கொடூரமாக கொலை செய்த தாய்... விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்...மதுரையில் நடந்த பயங்கரம்

x

வாடிப்பட்டி அருகே சல்லக்குளத்தை சேர்ந்தவர் சிவராஜ். அவரது மனைவி ஜீவிதா. இந்த தம்பதிக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, ஜீவிதா கடந்த ஆண்டு கர்ப்பம் தரித்த நிலையில், அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அடிக்கடி அழுவதாலும், உடல் முழுவதும் சரும நோய் ஏற்பட்டு தவித்து வந்ததாலும், விரக்தியடைந்த ஜீவிதா குழந்தையை பிளேடால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, குழந்தையின் தொட்டில் கழுத்தை இறுக்கி ரத்தம் வந்ததாக வீட்டில் நாடகமாடியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், ஜீவிதாவிடம் விசாரணை நடத்தியபோது, குழந்தையைக் கொன்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து ஜீவிதாவை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்