மெடிக்கல் ஷாப் ஓனரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்ற ரவுடி கும்பல்-வெளியான ஆடியோ.. சென்னை அருகே பயங்கரம்

x

மாமூல் கேட்டு தொந்தரவு செய்த பிரபல ரவுடியை மெடிக்கல் ஷாப் ஓனர் சிறைக்கு அனுப்பிய நிலையில், மெடிக்கப் ஷாப் ஓனர் புகாரை வாபஸ் பெற மறுத்ததால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தை சேர்ந்தவர் வினோத். இவர் அதே பகுதியில் இரண்டு மெடிக்கல் ஷாப்கள் வைத்து சுமார் 10 வருடங்களாக தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், சுமார் 3 வருடங்களுக்கு முன்பு ஓட்டேரியை சேர்ந்த பிரபல ரவுடி சிலம்பரசன் என்பவர் வினோத்திடம் மாமூல் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார். மாதம் மாதம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு சிலம்பரசன் தொந்தரவு செய்த நிலையில், பணம் தரவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என சிலம்பரசன் பேசிய ஆடியோ ஒன்றும் இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்