பட்டப்பகலில் சவுக்கு சங்கர் ஆதரவாளர்களை தாக்கிய மர்ம கும்பல்... வலைவீசி தேடும் போலீஸ்

x

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராஜா என்பவர், சவுக்கு சங்கரின் ஆதரவாளராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சவுக்கு சங்கர் மீடியாவை சேர்ந்த இருவருடன் சேர்ந்து, பேக்கரியில் ராஜா தேநீர் அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல், மூவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராஜா, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ராஜா அளித்த புகாரின் அடிப்படையில் 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்