நீர்த்தேக்கத் தொட்டியை மாணவர்கள் சுத்தம் செய்த விவகாரம்..தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

x

சென்னை கொரட்டூரில் அரசு உயர்நிலைப் பள்ளியின் நீர்த்தேக்கத் தொட்டியை 4-ஆம் வகுப்பு மாணவர்கள் சுத்தம் செய்த விவகாரத்தில், தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த பள்ளியில் 4-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், மொட்டை மாடியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்த காட்சி சமூக வலைதளத்தில் வெளியானது. இதையடுத்து, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அந்த விளக்கத்தில் குற்றச்சாட்டில் உண்மை இருப்பது தெரியவந்தால் தலைமை ஆசிரியர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்