லஞ்சம் கேட்டு இளைஞரை தாக்கிய விவகாரம் - எஸ்பி அதிரடி உத்தரவு

x

ரோந்து பணியின் போது பணம் கேட்டு இளைஞரை தாக்கிய விவகாரத்தில், உதவி காவல் ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்தும், காவலர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்தும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த களம்பூர் காவல் நிலைய போலீசார், வாகனம் ஒன்றை மறித்து, அதனுள் இருந்த இளைஞர்களிடம் பணம் கேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரான கார்த்திகேயனின் கவனத்திற்கு செல்ல, அவர் களம்பூர் காவலர் விக்னேஷை பணியிடை நீக்கம் செய்தும், உதவி ஆய்வாளர் சங்கரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்தும் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்