படம் எடுத்து ஆடிய குட்டி பாம்பு..மாறி மாறி கடித்து கொன்ற நாய்கள்..வெளியான அதிர்ச்சி காட்சி

x

கோவையில் படம் எடுத்து சீறும் குட்டி பாம்பை 6 நாய்கள் சுற்றி வளைத்து தாக்கும் வீடியோ, வைரலாகி வருகிறது. அரவிந்த் நகரில் பகுதியில் புதர் மண்டிய இடங்களில் இருந்த வெளியேறி குட்டி நல்ல பாம்பு ஒன்று தெருவில் தென்பட்டது. இதனைக் கண்ட அப்பகுதி தெரு நாய்கள் குட்டி பாம்பை சுற்றி வளைத்தன. ஆபத்தை உணர்ந்த குட்டி பாம்பு நாய்களை நோக்கி சீறி படம் எடுத்தது. ஆனால் வெவ்வேறு கோணங்களில் இருந்து 6 நாய்கள் மாறி மாறி கடித்து தாக்கியதில் பாம்பு காயம் அடைந்து உயிரிழந்தது.


Next Story

மேலும் செய்திகள்