தானம் கேட்டு சென்ற சிறுமி..ஈவு இரக்கம் இல்லாமல் கொடூரன்செய்த பகீர் செயல்..

x

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை ரயில்வே கேட் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ஆடுதுறை ரயில்வே கேட் அருகே சைக்கிள் ஸ்டாண்ட்டில் வேலை பார்த்து வருபவர் சிவக்குமார். சாலையோரத்தில் குடும்பத்துடன் தங்கியுள்ள 11 வயது சிறுமி ஒருவர், இவரிடம் சில்லறை கேட்டு வந்துள்ளார். அப்போது, சிறுமிக்கு, சிவக்குமார் பாலியல் தொல்லை கொடுக்கவே, சிறுமி சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த பெற்றோர், சிவக்குமாருக்கு தரும அடி கொடுத்துள்ளனர். இதனையடுத்து, அவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்