வானில் இருந்து வந்த ஒளி.. துடிதுடித்து மண்ணில் சாய்ந்த 3 பேர்

x

திருப்பத்தூர் அடுத்த தென்கரை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை, தனியார் நிறுவனம் சார்பில் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த பணியில் புதுக்கோட்டையை சேர்ந்த மதியழகன், அறந்தாங்கியை சேர்ந்த சரவணன் மற்றும் கல்லல் பகுதியை சேர்ந்த கண்ணன் ஆகிய மூவரும் ஈடுபட்டிருந்த நிலையில், சம்பவத்தன்று, லேசான மழை பெய்ததால் மூவரும் அருகில் உள்ள மரத்தடியில் ஒதுங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென மரத்தின் மீது இடி விழ, மூவரும் மின்னால் தாக்கி தூக்கி வீசப்பட்டிருக்கின்றனர். இதில், மதியழகனும், சரவணனும் சம்பவ இடத்திலே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திட்ட மேலாளரான கண்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்