திடீரென அறுந்து விழுந்த லிப்ட்... உடல் நசுங்கி பலியான தொழிலாளர்கள்.. உத்தரப்பிரதேசத்தில் பயங்கரம்

x

கிரேட்டர் நொய்டா பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய அடுக்குமாடி கட்டிடத்தில், தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியாற்றி வந்துள்ளனர். 14வது மாடியில் இருந்து சர்வீஸ் லிப்டில் தொழிலாளர்கள் கீழே இறங்கியபோது, லிப்டின் வயர் துண்டிக்கப்பட்டதில் விபத்து நேரிட்டது. இதில் 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்