உயிருக்காக போராடிய கடைசி நிமிடங்கள்.. அலட்சியத்தால் நேர்ந்த சோகம்

x

உயிருக்காக போராடிய கடைசி நிமிடங்கள்.. அலட்சியத்தால் நேர்ந்த சோகம்

#ambulance #sivagangai #thanthitv

சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சின்னத்துகவூர் பேருந்து நிறுத்தம் அருகே மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், அங்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர் காயமடைந்த ரமேஷ்க்கு முதலுதவி செய்யாமல், இவர் மது போதையில் இருக்கிறார் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த ரமேஷ் உயிருக்கு போராடிய நிலையில், பொதுமக்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி, அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது


Next Story

மேலும் செய்திகள்