அப்பார்ட்மெண்டில் இருப்பவர்களை அலறவிட்ட சம்பவம்...சென்னை பெருங்குடியில் அதிர்ச்சி - திக் திக் வீடியோ

x

சென்னை பெருங்குடியில் குடிநீர் சேமிப்பு தொட்டி குழாய் உடைந்து வெடிப்பு ஏற்பட்டதால், அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் தண்ணீர் புகுந்தது. மழைநீர் வடிகால் பணியின் போது, அருகிலுள்ள குழாயின் மீது பட்டு உடைந்ததால் நீர் வெளியேறியதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் இருந்த மின்கம்பம், தண்ணீரின் தாக்கத்தினால் சாய்ந்து கிடந்தது. இதனால் 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கார் சேதமடைந்துள்ள நிலையில், போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்