கழுத்தை இறுக்கிய பார்த்துக்கொண்டிருந்த கணவன் - துடிதுடித்து உயிரை விட்ட மனைவி

x

குத்தாலம் அருகே மனைவியை, கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குத்தாலம் அருகே அசிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் அதே பகுதியை சேர்ந்த அகிலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் சிவப்பாக உள்ளதால், மனைவி மீது தொடர்ந்து சந்தேகப்பட்டுள்ளார். இதனால் மனைவியை பல முறை தாக்கியும், சிகரெட்டால் சூடு வைத்தும் சித்ரவதை செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு கயிற்றால் கழுத்தை இறுக்கி மனைவியை கொலையும் செய்துள்ளார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த மயிலாடுதுறை நீதிமன்றம், ஐயப்பனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


Next Story

மேலும் செய்திகள்