ஜாடைமாடையாக பேசிய டிரைவர் தலை ரெண்டாக பிளக்கப்பட்ட பயங்கரம் - தேனியில் அதிர்ச்சி

x

மதுபோதையில் தொடர்ந்து தகராறு செய்து வந்த ஆட்டோ ஓட்டுநரை, பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனர் பார்த்திபன். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் கருப்பையா. பார்த்திபன் அடிக்கடி குடித்துவிட்டு வந்த மதுபோதையில், கருப்பையாவை தகாத வார்த்தையால் திட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மீண்டும் மதுபோதையில் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த கருப்பையா மற்றும் அவரது மகன் முத்துப்பாண்டி, மருமகன் ராஜவேல் ஆகிய மூவரும் சேர்ந்து பார்த்திபனை அரிவாளால், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில், அவர் படுகாயமடைந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பார்த்திபன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கருப்பையாவை கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள மற்ற இருவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்