மின்சார கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஆசாமி... தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

x

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி 4 முனை சந்திப்பில் மதுபோதை ஆசாமி ஒருவர் மின்சார கம்பத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது...

சங்கராபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் தற்கொலை மிரட்டல் விடுத்த நிலையில், பொதுமக்களும் காவல்துறையினரும் கீழே இறங்கக் கோரி எவ்வளவோ வலியுறுத்தியும் அந்த ஆசாமி கேட்ட பாடில்லை... மின்சாரம் உடனடியாகத் துண்டிக்கப்பட்ட நிலையில், சரசரவென கீழே இறங்கி வந்த சங்கர் சாலையில் ரகளையில் ஈடுபட்டார்... பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்த நிலையில், போலிசார் போதை ஆசாமியை பத்திரமாக மீட்டு விசாரணை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்