வட்டாட்சியரை குடும்பத்தினருடன் சேர்ந்து கத்தியால் வெட்டிய அரசு மருத்துவர்

x

உசிலம்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர் கருப்பையா என்பவருக்கும், காயத்ரி என்ற அரசு மருத்துவருக்கும் இடையே இடப்பிரச்சனை நிலவி வந்தாக கூறப்படுகிறது. இந்த இடப்பிரச்சினை தொடர்பான வழக்கில், கருப்பையாவுக்கு ஆதரவாக சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், இடத் காலி செய்து தருமாறு, காயத்ரியின் தனியார் கிளினிக்கிற்கு சென்று கருப்பையா பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கருப்பையாவை, அரசு மருத்துவர் காயத்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் கத்தியால் வெட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் கை, தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்