தலையில் ஏறி இறங்கிய அரசு பேருந்து! உடல் நசுங்கி பலியான முதியவர்.. நடுக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

x

சென்னை பெசன்ட் நகர் பேருந்து முனையத்தில் தூங்கி கொண்டிருந்த 55 வயது நபர் மீது மாநகர பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிகாலை பேருந்து நிலையத்திற்கு வந்த மாநகர பேருந்து ஒன்று கவனிக்காமல் உறங்கி கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபரின் தலையில் ஏறி இறங்கி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த நபர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான பதற வைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்