புத்தாண்டில் பெற்றோர் கண் முன்னே உடல் நசுங்கி பலியான சிறுமிகள்.. நடுரோட்டில் நடந்த அதி பயங்கரம்

x

வாணியம்பாடி அருகே நடந்த கோர விபத்தில், லாரி சக்கரத்தில் சிக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

திருப்பத்தூர் மாவட்டம் கம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன். இவர் புத்தாண்டு தினத்தையொட்டி தனது மனைவி மற்றும் 3 மகள்களுடன் ஒரே இருசக்கர வாகனத்தில் கோவில் சென்று திரும்பியுள்ளார். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாரப்பட்டு அருகே வந்தபோது முன்னாள் சென்ற லாரி ஒன்று சிக்னல் செய்யாமல் கடந்ததாக தெரிகிறது. இதனை சற்றும் எதிர்பாராததால் பரந்தாமனின் பைக் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் அவரது மகள்கள் கார்த்திகாஸ்ரீ, பேரரசி ஆகியோர் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்ற மூவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தலைமறைவான லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்