வயிறு வலிக்காக மருத்துவமனை சென்ற சிறுமி..மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்..அதிர்ந்து போன பெற்றோர்

x

செஞ்சி அருகே, 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி, வயிறு வலி காரணமாக, அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததை அடுத்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, 5 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, விஷ்ணு, மோகன்ராஜ், பிரதீப், சிவக்குமார், துரை ஆகிய 5 பேர் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், விஷ்ணு வேறொரு வழக்கில் சிறையில் இருக்கும் நிலையில், மற்ற 4 பேரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்