நடுரோட்டில் காரை மடக்கி ரூ.15 லட்சத்தை திருடிய கும்பல்.. விட்டு சென்ற முக்கிய தடயம்

x

ஃபைனான்சியரின் காரை மடக்கி 15 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில், தனிப்படை போலீசார் இருவரை கைது செய்தனர்...ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். ஃபைனான்சியரான இவர், கடந்த 8ம் தேதி வட்டிக்கு கொடுத்த பணத்தை வசூல் செய்து கொண்டு, சித்தூரில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கத்தாரிக்குப்பம் அருகே காரை வழிமறித்த மர்ம கும்பல், காரின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்து, சரவணன் மற்றும் அவரது ஓட்டுநரை மிரட்டியுள்ளனர். தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டி 15 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து, காரில் தப்ப முயன்றனர். அப்போது அவர்கள் வந்த கார் வயலில் சிக்கிக் கொள்ளவே, அதை அங்கேயே விட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இந்த வழக்குத் தொடர்பாக தனிப்படை அமைத்த போலீசார், கொள்ளையர்கள் விட்டுச் சென்ற கார் அடிப்படையில் இருவரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 9 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்