வீடு புகுந்து ஓனரை வெட்டி வீசிய நண்பர்கள்...தூத்துக்குடியை உலுக்கிய பயங்கரம்

x

அமுதா நகர் பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் பேண்ட் வாத்திய செட் வைத்து தொழில் செய்து வந்தார். அவருடன் ராஜா, நவீன், ஆரோன்ஆகியோரும் சேர்ந்து பணியாற்றி வந்துள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன், அந்த பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது, கருப்பசாமிக்கும், அவரது நண்பர்களான ராஜா, நவீன், ஆரோன் ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மூவரும் சேர்ந்து கருப்பசாமியை அரிவாளால் வெட்டிய நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜராகி அவர்கள் மூவருக்கும் எதிராக சாட்சி சொல்ல இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜா, ஆரோன் உள்ளிட்டோர், வீட்டில் தூங்கி கொண்டிருந்த கருப்பசாமியை, பட்டப்பகலில் வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச்சென்றுள்ளது


Next Story

மேலும் செய்திகள்