தூர்ந்துபோன முகத்துவாரம்.. போட்டில் சென்று கலெக்டர் ஆய்வு.. கொடுத்த உறுதி.. நம்பிக்கையோடு மக்கள்

x

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு ஏரியில் முகத்துவாரம் அமைக்கும் திட்டம் பல்வேறு காரணங்களால் தொடங்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் மணல் திட்டுக்களால் அடைபட்டு முகத்துவாரம் முற்றிலும் தூர்ந்துபோனது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்துள்ள நிலையில், சொந்த செலவில் மீனவர்களே தற்காலிகமாக தூர்வார முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து, தூர்ந்துபோன முகத்துவாரம் பகுதியை படகில் சென்று நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், நீர்வள ஆதாரத்துறை மூலமாக தற்காலிக தீர்வாக 2 முகத்துவாரம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்