புயல் வேகத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரயில்... தண்டவாளத்தில் இறங்கிய பயணிகள் - அரக்கோணத்தில் பரபரப்பு

x

அரக்கோணம் ரயில்நிலையத்தில், ரயில்வரும் வேளையில் தண்டவாளத்தில் இறங்கி அடுத்த நடைமேடையை அடைந்த பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக வழக்கமான மூன்றாவது நடைமேடையில் பயணிகள் காத்திருந்தனர். அப்போது ரயிலானது ரயில் நிலையத்திற்குள் வரும் வேளையில் திடீரென, ரயில் முதலாவது நடைமேடைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் அடைந்த பயணிகள் படிக்கட்டுகளில் ஏறி முதலாவது நடைமேடையை அடைந்தால் நேரம் ஆகிவிடும் என்பதால், தண்டவாளத்திலேயே இறங்கி பயணித்தனர். இதனால், ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்