நம்பிய ஓனருக்கு மொட்டை அடித்த ஊழியர்.. சிசிடிவியில் தெரிந்த தில்லாலங்கடி வேலை

x

பிரபல நிறுவனம் ஒன்றில், வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய வைத்திருந்த 42 விலையுயர்ந்த செல்போன்களை ஊழியரே திருடிச் சென்ற நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, மயிலாப்பூரில் பிரபல பிரைவெட் லிமிடெட் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து வாடிக்கையாளர்களுக்கு முறையாக செல்போன் விநியோகம் செய்யப்படாததால், அந்திறுவன மேலாளர் சந்தேகமடைந்துள்ளார். உடனே, நிறுவனத்தின் சிசிடிவி காட்சிகளை அவர் பார்த்த போது, நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அஜித் என்ற இளைஞர், 42 விலையுயர்ந்த செல்போன்களை பேக்கிங் செய்யும் போதே திருடியது தெரியவந்திருக்கிறது. , நிறுவன மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில், இளைஞர் அஜித்தை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், திருடிய செல்போன்களை பீச் ஸ்டேஷனின் உள்ள ஒரு செல்போன் கடையில் விற்பனை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்த நிலையில், அக்கடை வியாபாரியையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்