கற்களை வீசி வீட்டின் ஜன்னல்களை உடைத்த போதை ஆசாமி... சுற்றி வளைத்து பிடித்த கிராம மக்கள்..

x

தெக்குமேடு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், ஜோலார்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கூத்தாண்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், மணல் கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், கடத்தலில் ஈடுபடக்கூடாது என பிரபாகரனை எச்சரித்ததாக கூறப்படுகிறது. எனினும், தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட பிரபாகரனின் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். மணல் கடத்தல் குறித்து போலீசாருக்கு வெங்கடேசன் தகவல் அளித்திருக்கலாம் என கருதிய பிரபாகரன், மது போதையில் அவரது வீட்டின் முன் தகராறில் ஈடுபட்டார். மேலும், வீட்டின் மீதும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார். பொதுமக்கள் பிரபாகரனை மடக்கிப் பிடித்து வீட்டில் வைத்து பூட்டி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்தின்கு வந்த போலீசார் பிரபாகரனை விசார​ணைக்கு அழைத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்