தள்ளாடும் போதையில் தனியார் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்.. விபத்தில் சிக்கிய விசிக தொண்டர்கள்..

x

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாநாட்டிற்காக சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்தனர். தர்மபுரி மாவட்டம், பத்தலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பொம்மிடி மேம்பாலத்தின் மீது சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி, எதிரே வந்த வாகனத்தின் மீதும், பாலத்தின் தடுப்பு சுவர் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் படுகாயமடைந்தனர். இதனிடையே, பேருந்தை ஓட்டிய முகேஷ் என்பவர் மது போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால், ஓட்டுநரை கைது செய்ய வேண்டுமெனக் கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்