சிறுமியை கடித்து குதறிய நாய்... கண்ணீர் விட்டு கதறும் பாட்டி... காண்போரை பதற வைக்கும் காட்சி

x

சென்னை கோயம்பேட்டில் வீட்டின் அருகே நடந்து சிறுமியை நாய் கடித்து குதறிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கோயம்பேடு நியூ காலனி பகுதியை சேர்ந்த வாணி என்பவருக்கு சொந்தமான நாய், அதே பகுதியை சேர்ந்த சிறுமி, கடைக்கு சென்று விட்டு திரும்பியபோது கடித்துக் குதறியது. இதில் படுகாயமடைந்த சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்