சக மாணவிகள் முன்னால் ஆடைகளை கலைத்த கொடூர ஆசிரியை..! - அவமானத்தால் மாணவி எடுத்த விபரீத முடிவு

x

சக மாணவிகள் முன்னால் ஆடைகளை கலைத்த கொடூர ஆசிரியை..! - அவமானத்தால் மாணவி எடுத்த விபரீத முடிவு

#School #Teacher #Student #Police

கர்நாடகாவில், திருடியதாக குற்றம்சாட்டி சக மாணவிகளை வைத்து ஆசிரியை ஆடைகளை கலைத்து சோதனை செய்ததால், மனமுடைந்த 8ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vovt

கர்நாடகாவின் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியை ஜெயஸ்ரீ என்பவர், தனது பையில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் பணம் மாயமான விவகாரத்தில், அதே பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி மீது சந்தேகம் எழுந்துள்ளது. அப்போது ஆசிரியை மாணவியிடம் பணம் குறித்து கேட்க, தான் எடுக்கவில்லை என மாணவி கூறியுள்ளார். எனினும் அதனை ஏற்க மறுத்த ஆசிரியை, மாணவியின் ஆடைகளை, சக மாணவிகளைக் கொண்டு கலைந்து சோதனையிட்டுள்ளார். இதனால் மிகுந்து அவமானத்துடன் வீடு திரும்பிய மாணவி, மனவேதனையில் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்