மகன் செய்த பெருங்குற்றம்.. சூனா பானாவாக மாறிய அம்மா - ஆட்டைய கலைத்த தம்பி.. அசந்த போலீசார்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் கதவனி புதூரை சேர்ந்த பராசக்தி என்ற பெண், தனது கணவர் சதீஷ்குமார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக போலீசில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் அன்பரசி விசாரணை நடத்தினார். அப்போது காவல் ஆய்வாளர் தனது குடும்பத்தை தரக்குறைவாக பேசியதாக கூறி சதீஷ்குமாரின் சகோதரர் ஹரி பாஸ்கர் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருடன் சேர்ந்து சதீஷ்குமாரின் அம்மாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் விசாரணை முடிவதற்கு முன்பாகவே ஹரிபாஸ்கர் தங்களுடைய குடும்பதினரை அழைத்து கொண்டு எஸ் பி அலுவலகம் செல்கிறேன் என கூறியபடி அங்கிருந்து சென்றார். குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினர் திரைப்படத்தில் வருவதை போல சூனா பானாவாக மாறி விசாரணையை கலைத்த சம்பவம் காவல்நிலையத்திலேயே அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்