தொடரும் இடைவிடாது போராட்டம்...திடீரென மயங்கி விழுந்த நபர்...பரபரப்பான என்.எல்.சி போராட்டக்களம்

x

நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி,19-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..

அங்கு, என்எல்சியில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள்

கடந்த 26 ஆம் தேதி இரவு முதல் பணிநிரந்தரம் செய்யக்கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, குறைந்த பட்ச மாத ஊதியம் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், வீடு, நிலம் கொடுத்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதனிடையே, இன்று 2வது நாளாக நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் தொழிலாளி ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது. உடனே அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்...


Next Story

மேலும் செய்திகள்