நடுவானில் துடி துடித்த குழந்தை உயிர்.. அவசரமாக துருக்கியில் இறங்கிய விமானம் - முதல்வர் எடுத்த முடிவு

x

துருக்கி நாட்டில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தமிழகம் வந்தடைந்த குழந்தையை, அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்று தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த 3 வயது குழந்தைக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து , விமானம் அவசரமான துருக்கில் தரையிறக்கப்பட்டு குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக, தமிழக அரசு சார்பில் நிதி அளித்து, சென்னைக்கு மருத்துவ வசதிகளுடன் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி சென்னை வந்த குழந்தையை வரவேற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்